100வது ஆண்டு வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம்..

x

100வது ஆண்டு வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம்..

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில், சர்வதேச நூறாவது ஆண்டு வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம் கொண்டாடப்பட்டது.

விமான கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆன நிலையில், இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

கடல் மேல் செல்லும் விமானங்களை கண்காணிக்க நவீன கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை அடிப்படையில் உள்ளதாகவும், இன்டர்நெட் புரோட்டோகால் அதிஉயர அலைவரிசை தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்