அப்பாவின் திருட்டுக்கு அநியாயமாய் பலியான 10 வயது மகள் - புதுக்கோட்டையில் அதிர்ச்சி | pudukkottai

x

புதுக்கோட்டை அருகே, குடும்பத்துடன் திருட வந்தவர்களை தாக்கியதில், 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுக்கோட்டை அருகே, கோயில்களில் பித்தளை பொருட்களை விருதாச்சலத்தைச் சேர்ந்த நாராயண சாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் திருடிக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றார். அப்போது, விரட்டிச் சென்ற இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதில் நாராயணசாமியின் 10 வயது மகள் கற்பகாம்பாள் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். தற்போது சிறுமி இறந்து விட்டதால் இளைஞர்கள் மீது கொலை வழக்காக இது மாற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்