"1 மாதத்திற்கு 10 முறை வீடியோ கால்".. - புழல் சிறையில் கைதிகளுக்கு புது வசதி

x

சென்னை புழல் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி, சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.

சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த 10ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, புழல் பெண்கள் தனிச்சிறையில், சிறைவாசிகளுக்கான வீடியோ அழைப்பு முறை சோதனை முறையில் தொடங்கப்பட்டது. இதன் மூலம், கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை ஒரு மாதத்தில் 10 முறை தொடர்பு கொள்ளலாம் என்றும், ஒவ்வொரு அழைப்பிலும் 12 நிமிடங்கள் வரை பேச முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சிறைவாசி மாதத்திற்கு மொத்தம் 120 நிமிடங்கள் வரை பேச அனுமதிக்கப்படுவர் என்று சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி தெரிவித்துள்ளார். இந்த திட்டம், தொலைதூரத்தில் இருந்து சந்திக்க வர முடியாதவர்களை தொடர்பு கொள்ளவும், மன அழுத்த‌த்தை குறைக்கவும் உதவும் என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்