வேலூரில் 10 மாதத்தில் 104 பேர் குண்டர் சட்டத்தில் கைது

x

தமிழகம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல், நேற்று வரை கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட 77 பேரும்,

சாராய வியாபாரிகள் 26 பேரும், மணல் கடத்தல் வழக்கில் ஒருவர் என ஒட்டுமொத்தமாக 104 பேரை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்