அரசு மருத்துவமனைக்கு தரம் குறைந்த பாராசிட்டமால் நிறுவன இயக்குனர்களுக்கு 1 ஆண்டு சிறை

x

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் சிப்காட் பகுதியில் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், தயாரிக்கும் மாத்திரைகள் தரம் குறைந்ததாக உள்ளதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், நிறுவனத்தின் இயக்குனர்கள் மகேந்திரா பி. ஜெயின் மற்றும் ராஜேஷ் பி ஜெயின் மற்றும் அந்த நிறுவனத்தின் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. விசாரணைக்கு பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பில்,மகேந்திரா பி ஜெயின் மற்றும் ராஜேஷ் பி. ஜெயின் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், தலா 60 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிபதி தீர்ப்பளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்