ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் 1 கர்ப்பிணி மரணம் - ஐநா-வின் ஷாக் ரிப்போர்ட்

x

2020ல் பிரசவத்தின் போது ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணி உயிரிழந்திருப்பதாக ஐநா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆனால் உலகளவில் பேறு காலத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறைந்திருப்பதாக தெரிவித்துள்ள ஐநா, பிரசவத்தின் போது வெனிசூலா நாட்டில் அதிகளவில் கர்ப்பிணிகள் உயிரிழந்ததாகவும்...

பெலாரஸில் இந்த இறப்பு விகிதம் பெரியளவில் குறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

2016 முதல் 2020 ஆண்டு வரை இடைப்பட்ட 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளில் மட்டுமே பேறு கால இறப்பு விகிதம் குறைவாக பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்