"8 மாணவிகளுக்கு 1 நாள் முதல்வர் பதவி" - இன்ப அதிர்ச்சி கொடுத்த தனியார் கல்லூரி

x

திருவாரூர் அருகே 8 கல்லூரி மாணவிகளை ஒரு நாள் முதல்வராக நியமனம் செய்து, மாணவிகளுக்கு தனியார் கல்லூரி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. சேந்தமங்கலத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் 12 மாணவிகள் கடந்த பருவத்தேர்வில் பாரதிதாசன் பல்கலைகழக தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதனையடுத்து அந்த மாணவிகளை கௌரவிக்கும் விதமாகவும் அந்த கல்லூரியில் படிக்கக்கூடிய மற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் கல்லூரி நிர்வாகம் ஒரு முடிவு எடுத்தது. அதன் அடிப்படையில் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற ஏழை எளிய விவசாய குடும்பங்களை சேர்ந்த எட்டு மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களை ஒருநாள் கல்லூரி முதல்வராக நியமித்து மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் இன்ப அதிர்ச்ச கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மாணவிகள் ஒரு நாள் முதல்வராக கல்லூரி முழுவதும் வலம் வந்தனர். குறிப்பாக வகுப்பறைகளுக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினர்.


Next Story

மேலும் செய்திகள்