"புதுசு புதுசா யோசிக்கிறாங்களே.." - கலவரங்களை கட்டுப்படுத்த வருகிறது ட்ரோன்

x

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் ஒத்திகை நடத்தப்பட்டது. கலவரக்காரர்கள் போல் செயல்பட்ட காவல்துறையினர் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ட்ரோன் மூலம் ஒரே நேரத்தில் நான்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதோடு, இரண்டு நிமிடத்தில் மாற்றுக் கண்ணீர் புகை குண்டுகளை பொருத்திக் கொள்ள முடியும் என்றார். ட்ரோனில் உள்ள கேமரா மூலம் கலவரக்காரர்கள் துல்லியமாக கண்டறிய முடியும் என கோவை மாநகர எஸ்.பி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்