"25 வீடு எப்போ விழும்னே தெரியாது" உயிரை கையில் பிடித்து வாழும் குடியிருப்புவாசிகள்

x

திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதால், குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்ட நிலையில், ஓட்டுநர் மூர்த்தி என்பவரது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து மூன்று வயது குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுபோல் அடிக்கடி மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுவதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், புதிய வீடு கட்டிக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்