"நேற்று பிறந்தநாள்.. இன்று மரணம்" - நெஞ்சை உலுக்கிய புகைப்பட கலைஞர் இறப்பு.. முதல்வர் இரங்கல்

x

லாரி மோதி சாலை விபத்தில் உயிரிழந்த திமுக சமூக செயற்பாட்டாளர் ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக சமூக செயற்பாட்டாளரும், what a karwad என்ற உணவு நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல புகைப்பட கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வேளாண்மை துறை தனி நிதி நிலை அறிக்கைக்கான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்று விட்டு ஸ்டாலின் ஜேக்கப் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னால் வந்த லாரி மோதியதில், அவரும், அவருடன் சென்ற ஜீவா என்பவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனிடையே, சாலை விபத்தில் பலியான ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கட்சியின் துடிப்பான சமூக வலைத்தள செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் அவர் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்