"இனி சாமி பத்தி தப்பா பேசுவ..?" "ஐயப்பன் குறித்து அவதூறு.." நாத்திகரை நடுரோட்டில் வைத்து தகர்த்த பக்தர்கள்

x

தெலங்கானாவில் ஐயப்ப சாமியை அவமதித்து, கீழ் தரமாக விமர்சித்தவருக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரதிய நாஸ்திக சமாஜ் என்ற பெயரில் கடவுள் மறுப்பு இயக்கம் நடத்தி வரும் நரேஷ், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் ஒன்றில் ஐயப்ப சாமியை தரைக்குறைவாக விமர்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், நரேஷின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியதோடு, அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் நரேஷை மீட்டு, காவல்நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்