தேர்தல் அரசியலிலிருந்து விலகிய ஈஸ்வரப்பா.. திடீரென தொலைபேசியில் அழைத்த பிரதமர் மோடி - பின்னணி என்ன?

x

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா உடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்...

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல் வெளியான நிலையில், தேர்தல் அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாகவும், கட்சிக்கு தொடர்ந்து உழைப்பேன் எனவும் பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியானது. இதனிடையே ஈஸ்வரப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, அவரது குடும்பத்தாரின் நலனை விசாரித்தார். ஈஸ்வரப்பாவின் செயலை பாராட்டிய அவர், கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்