Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.03.2026) | 6 AM Headlines | ThanthiTV
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்...
விட்டுக்கொடுத்துதான் 10 தொகுதிகளை பெற்றிருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்...
தேமுதிக வேட்பாளர் பட்டியல் வரும் 27ஆம் தேதி வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்...
ரிஷிவந்தியம், விருத்தாச்சலம், விருதுநகர், ஆம்பூர் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளோம்...
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்...
திமுக - விசிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது....
விசிகவிற்கு 6 தனி தொகுதிகள், 2 பொது தொகுதிகள் என மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது....
கூட்டணி நலனை அடிப்படையாகக் கொண்டு தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்...
