Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (22.04.2026) | 4 PM Headlines | ThanthiTV
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், கூடுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.....
234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது...
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது......
வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈவிஎம் எந்திரங்களை எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது...
மலைகிராமமான வெள்ளகெவிக்கு வட்டக்காணல் பகுதியில் இருந்து குதிரை மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது...
6 தேர்தல் அதிகாரிகள் பணியில் ஈடுபடவுள்ள நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பாக நக்சல் தடுப்பு சிறப்புக் காவலர்கள் உடன் சென்றனர்...
தமிழ்நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 262 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது....
ரொக்கப் பணமாக 543 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்...
வாக்குச் சாவடி மையத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்....
வாக்காளர்களுக்கு மாதிரி கூப்பன்கள், காசோலைகள் வழங்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...
