Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03.05.2025) | 1PM Headlines | ThanthiTV
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன...
வாக்கு எண்ணும் பணியை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன...
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன...
நாளை அதிகாலை 5 மணி முதல், தந்தி டிவியில் நொடிக்கு நொடி அப்டேட் தரும் வகையில், தொடர் நேரலை செய்யப்படுகிறது...
வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்...
காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 234 தொகுதி பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்...
வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் டிஜிபி-க்கு திமுக சார்பில்
கடிதம் எழுதப்பட்டுள்ளது.....
வாக்கு எண்ணும் மையங்களில் பாஜக இடையூறு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... கோவையில் 10 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், போலீஸார் கலவர தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்......
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளேயோ, வெளியவோ அரசியல் கட்சியினருக்கு இடையே மோதல் நடைபெற்றால் அதனை கையாள்வது குறித்து போலீஸாருக்கு பயிற்சி வழங்கப்பட்டது..
