Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10.03.2026) | 7 PM Headlines | Thanthi TV
மேற்கு ஆசியாவில் நிலவும் போரால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.....
அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தை முறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது...
நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும், முழுமையாக சமையல் எரிவாயு உற்பத்தியை மட்டுமே மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது....
அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் மட்டுமே எல்.பி.ஜி. சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.....
நாடு முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உடன் பிரதமர் மோடி ஆலோசனை...
உள்நாட்டில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் இருப்பு குறித்து அமைச்சரிடம் பிரதமர் கேட்டறிந்தார்....
தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான சிலிண்டர் கையிருப்பு உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...
தடையின்றி தமிழகத்திற்கு கேஸ் சிலிண்டர்களை விநியோகிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்..
சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்...
மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவும் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்...
