மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை - YMCA கல்லூரி முதல்வர் போக்சோவில் கைத

x
  • பாலியல் தொல்லை அளித்த புகாரில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரியின் முதல்வரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
  • சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரியின் முதல்வராக இருந்து வரும் ஜார்ஜ் ஆபிரகாம், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்து வந்தது.
  • இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் தொல்லை அளித்ததாக 17 வயது மாணவி ஒருவர் கல்லூரி தாளாளரிடம் தெரிவித்துள்ளார்.
  • இதனையடுத்து, தாளாளர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விசாரனை நடத்திய போலீசார், கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்
  • . இதனிடையே, ஏற்கனவே மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரில், இவர் முன் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்