உலகை உலுக்கிய நிலநடுக்கம் - இந்தியர்களுக்கு வெளியிட்ட அவசர கோரிக்​கை

x

நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு இந்தியர்கள் உதவிட வேண்டும் என, ​இந்தியாவில் உள்ள சிரியா தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து டெல்லியில் உள்ள சிரியா தூதரகம் வெளியிட்டுள்ள கோரிக்கையில், துயரத்தில் இருக்கும் சிரியா மக்களுக்கு உதவிட, மருத்துவ உபரகணங்கள், அவசர மருந்துகள், போர்வைகள், கூடாரங்கள், குளிரை போக்க உதவிடும் துணிகள், உள்ளிட்டவற்றை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நிதியுதவி தர விரும்பும் நபர்களுக்காக, வங்கி கணக்கு எண் மற்றும் IFSC code-ஐயும், சிரிய தூதரகம் வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்