“வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்“- “அடுத்த 12 மணி நேரத்தில்...“- அடித்து ஊற்றப் போகும் மழை

x

"பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...

இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பிப்ரவரி01 ஆம் தேதி இலங்கை கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...

இதன் காரணமாக 1 ஆம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது....

தென்மேற்கு வங்காள விரிகுடா இலங்கைக் கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதி மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்