10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - மாணவர்கள் கவனத்திற்கு..! வெளியான முக்கிய அறிவிப்பு

x
  • விபத்து உள்ளிட்ட அவசர காரணங்களுக்காக சிறப்பு சலுகைகள் கோரும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களே அனுமதி அளிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
  • இதுதொடர்பாக தேர்வுத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சிறப்பு சலுகை கோரி இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு தேர்வு துறை இயக்குனர் அலுவலகம் மூலமாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இனி மாவட்ட கல்வி அலுவலர்களே அனுமதி வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், மாணவர்கள் சமர்ப்பிக்கும் சான்றிதழ்களில் சந்தேகம் இருந்தால், அதற்காக மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல் இருக்க கூடாது என்றும், அவர்களை தேர்வு எழுத அனுமதித்து விட்டு, தேர்வுக்குப் பிறகு அவர்களிடம் சான்றுகளை கேட்டு பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
  • மாணவர்கள் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காத பட்சத்தில், அவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்