'சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு' பிரிவு உபசார விழாவில்..கண்ணீர் மல்க பேசிய சானியா மிர்சா

x
  • சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வுபெற்ற சானியா மிர்சாவுக்கு ஹைதராபாத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
  • கடந்த மாதம் நடைபெற்ற துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடருடன், சர்வதேச டென்னிஸில் இருந்து சானியா மிர்சா ஓய்வு பெற்றார்.
  • இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் டென்னிஸ் ஸ்டேடியத்தில் சானியா மிர்சாவுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
  • இதில் டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • தொடர்ந்து நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு சானியா மிர்சாவுடன் செஃல்பி எடுத்தனர்.
  • பிரிவு உபசார விழாவில் கண்ணீர் மல்க பேசிய சானியா மிர்சா, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
  • இன்னும் பல சானியாக்கள் உருவாக வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்