" யூடியூப் சேனல்கள் தொடங்க தடை" கேரள அரசு அதிரடி உத்தரவு

x
  • அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல்களை தொடங்க கேரள அரசு தடை விதித்துள்ளது
  • கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல் தொடங்குவதற்கும், வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கும் தடை விதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • யூடியூப் சேனல் தொடங்க அனுமதி கோரி தீயணைப்பு படை ஊழியர் ஒருவர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
  • அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல்களை தொடங்குவது சந்தாதாரர்களின் அடிப்படையில் நிதி ஆதாயம் பெறும் செயல் என்பதால் சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில், மாநிலத்தின் சில அரசு துறைகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடு இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்