ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்... காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா?

x
  • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்களுடன் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.
  • இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மிகப் பெரிய அளவில் ராஜினாமா செய்ய வேண்டும் என பரிந்துரை வழங்கினர்.
  • இருப்பினும் இது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
  • கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வெற்றியின் மூலம் இந்த தகுதி நீக்கத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
  • இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், வேண்டுமென்றே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு செல்வோம் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்