2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து இன்று முறையீடு செய்கிறார் ராகுல்காந்தி..?

x
  • கோலாரில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி சமூகம் பற்றி அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோதி தொடர்ந்த வழக்கில், சூரத் மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
  • இதையடுத்து அவரது எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.
  • இந்நிலையில், 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராகவும், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் இன்று முறையீடு செய்யப்படுகிறது.
  • அதற்காக, அவர் சூரத் செல்லக்கூடும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்