தர்மயுத்தம் நடத்தியது ஏன்? சிஎம் பதவியை ராஜினாமா செய்தது யாரால்..? - "தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்" ஓபிஎஸ் மகன் பரபரப்பு அறிக்கை

x

தர்மயுத்தம் ஏன் நடந்தது என்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், ஜெய பிரதீப் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றதும், சில தலைமைக் கழக நிர்வாகிகளின் தூண்டுதலால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் என மூளைச்சலவை செய்ததாக கூறியுள்ளார்.

அப்போது ஒ.பன்னீர்செல்வம், தற்போது கட்சியை வழி நடத்த வேண்டிய தருணம் என்றும்,

தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்திக்க வேண்டும் என கூறியதாக ஜெயபிரதீப் கூறியுள்ளார். ஆனால் ஒபிஎஸ் கருத்தை அப்போது யாரும் ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

உடனே ஓ. பன்னீர்செல்வம், ஒரு சில தலைமைக் கழக நிர்வாகிகளின் வற்புறுத்தலால் தனது முதலமைச்சர் பதவியை கையெழுத்திட்டு கொடுத்து விட்டு, தொண்டர்களிடம் உண்மை நிலவரத்தை தெரிவிப்பதற்காக நினைவிடம் சென்றதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்