பாமக தலைவரானார் அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி மற்றும் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜி.கே. மணி பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்ய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதை கேட்டு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்