60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கி கொண்ட 8 வயது சிறுவன் | Madhyapradesh | Borewell

x
  • மத்தியபிரதேசத்தில், ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள, எட்டு வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
  • விதிஷா பகுதி அருகே, 60 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், எட்டு வயது சிறுவன் தவறி விழுந்து, 43 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார்.
  • இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
  • மாநில பேரிடர் மீட்பு படையின் மூன்று குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மருத்துவர்களின் உதவியுடன் சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
  • இதனிடையே சிறுவனை மீட்க 49 அடி குழி தோண்ட திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது 34 அடி வரை தோண்டியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்