விரைவில் வரப்போகும் தாழ்தள பேருந்துகள்... போக்குவரத்து துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு போக்குவரத்து துறை தரப்பில், 650 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளங்களுடன் கூடிய பேருந்துகளை உற்பத்தி செய்ய ஒரு நிறுவனம் மட்டுமே தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் நீதிபதிகள், சென்னையில் தாழ்தள பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும்-முடியாது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்