ஆட்டோ, கார் நேருக்கு நேர் மோதி விபத்து..! மருத்துவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் ஊழியர்களே சிகிச்சை.. 3 பேர் பரிதாபமாக பலி

x
  • செஞ்சி அருகே ஆட்டோ மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
  • கன்னலம் பகுதியில் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்று விட்டு புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதியது.
  • இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த புதுச்சேரி பகுதியை சேர்ந்த விஜயகுமாரி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • மேலும் ஆட்டோ ஓட்டுனர் பாலசுப்பிரமணி மற்றும் அவரது மனைவி வேளாங்கண்ணி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • ஆனால், செஞ்சி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் மருத்துவர்கள் இல்லாததால், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும், செவிலியர்களும் சிகிச்சை அளித்தனர்.
  • இதனால், படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி வேளாங்கண்ணி ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • விபத்து குறித்து வளத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்