வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து

x
  • திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே ப்ளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
  • செங்குன்றம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அதனை தரம் பிரிக்கும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது.
  • அங்கு வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், குடோனில் திடீரென தீப்பிடித்து மளமளவென தீ பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
  • இரவு நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் இல்லாத நிலையில், உயிர்சேதமும், தீக்காயம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
  • குடோன் முழுவதும் கரும்புகை சூழ்ந்து மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால், ஜேசிபி மூலம் குடோனின் தடுப்புகளை அகற்றி தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
  • இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

Next Story

மேலும் செய்திகள்