38 ஆண்டுக்கு பின்.. மீண்டும் சட்டப்பேரவைக்குள்.. எம்.எல்.ஏ.வாக பதவியேற்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
  • இந்நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று காலை 11 மணிக்கு எம்.எல்.ஏ.வாக பதவியேற்கிறார்.
  • அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
  • பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
  • ஏற்கனவே, கடந்த 1984ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்துள்ளார்.
  • தற்போது, 38 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்

Next Story

மேலும் செய்திகள்