இன்றே கடைசி நாள்.. ஆதார் இணைக்காவிட்டால்.. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த தடை

x
  • மின் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
  • தமிழ்நாட்டில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி மின் வாரியம் அறிவித்தது.
  • முன்னதாக இந்த பணிகளுக்கான கடைசி நாளாக டிசம்பர் 31-ஆம் தேதி கூறப்பட்ட நிலையில், பின்னர் பிப்ரவர் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்றுடன் ஆதார் எண் இணைக்கும் கெடு நிறைவடைகிறது.
  • மேலும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் இனி இணையம் வாயிலாக மின் கட்டணம் செலுத்த முடியாத சூழல் உருவாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்