#BREAKING || பணப்பட்டுவாடா புகார்- டிஜிபி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

x

இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்

டி.ஜி.பி. விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

ஈரோடு கலெக்டரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது -ஈரோடு கிழக்கு தொகுதி யில் தி.மு.க. கூட்டணி போது செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்ற அமைச்சர் கே.என்.நேரு வும், வேட்பாளர் ஈ.வி. சாகு -கே.எஸ். இளங்கோவனும் அருகருகே இருந்துபேசிக் கொண்ட வீடியோ வெளி யாகி பெரும்" பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சார்பில் துணைத் தலைவர்கள், வழக்கறிஞர்பால் கனகராஜ், கே.பி.ராமலிங்கம், நாரா யணன் திருப்பதி உள்ளிட்டநிர்வாகிகள் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகார் அளித்த னர். அமைச்சரின் பேச்சு அடங்கிய ஆடியோ. வீடியோ . ஆதாரங்களையும் வழங்கினர்.

முறையான தேர்தல்நடை பெற வருவாய், காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமா ரும் புகார் கொடுத்தார். தேர்தலை முறையாக நடந்துவதற்கு தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தர்

இந்த புகார் மீது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இப்போது நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளார். டி.ஜி.பி‌ சைலேந்திரபாபு மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி ஆகியோரி டம் விளக்கம் கேட்டு நடந்த சம்பவத்தை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு சத்யபிரதா சாகு உத்தரவிட்ட உள்ளார்

இந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அதை அனுப்பி வைக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்