'ஊக்க ஊசி' போட்ட இந்திய வீரர்கள்...ரகசிய கேமராவில் அனைத்தும் அம்பலம் - காற்றில் பறக்கும் இந்திய கிரிக்கெட் மானம்..!

x
  • கடந்த 2021ம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, லீக் சுற்றுடன் வெளியேறிய பிறகு, டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார் விராட் கோலி...
  • ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக தொடர அவர் விருப்பம் தெரிவித்த போதும், கோலியை நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ...
  • சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் அப்போது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கோலி நீக்கப்பட்டதற்கு அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி தான் காரணகர்த்தா என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த விவகாரம் நீர்த்துப்போனது.
  • இத்தகைய சூழலில், கோலி-கங்குலி விவகாரம் தற்போது மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது.
  • ஆம்... கோலி-கங்குலி இடையிலான உரசல் , பிசிசிஐ-யில் நடக்கும் அரசியல், இந்திய அணியில் மறைக்கப்படும் ரகசியங்கள் என பல்வேறு சர்ச்சைகளை வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறது, தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மாவிடம் நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷன்....
  • தனியார் தொலைக்காட்சி ஒன்று, சேத்தன் சர்மாவிடம் ரகசிய கேமரா மூலம் புலனாய்வு நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்