சென்னை சென்ட்ரல் செல்வோர் கவனிக்க..! இனி சென்னை சென்ட்ரலில் ஒலிபெருக்கியில் அறிவிப்புகள் கிடையாது - இந்தியாவிலேயே முதல்முறை!

x
  • தமிழகத்தில் முதன்முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை, அமைதியான ரயில் நிலையம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
  • ரயில்களின் புறப்பாடு வருகை குறித்த தகவல்கள் ஒலி பெருக்கி வாயிலாக அறிவிப்பது நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் திரையில் மட்டுமே வெளியிடப்படுகின்றன.
  • சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுகக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
  • தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில், ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு, நடைமேடை எண் போன்ற தகவல்கள், ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவிக்கப்பட்டு வந்தது.
  • இந்நிலையில் முதன் முறையாக, ஒலிப்பெருக்கியில் அறிவிப்பது நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் திரையில் தகவல்களை வெளியிடப்படுகின்றன.
  • சோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டம், பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து நிரந்தரமாக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்