அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

x

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஒரு சமூக குழு நடத்தாமல் அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த கோரிய வழக்கு,உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,2022ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, நீதிமன்ற உத்தரவுபடி, அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், 2023 ஆண்டு, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், ஒரு சமூக குழு மட்டும் நடத்தக்கூடிய சூழ்நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டியில் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால்,

நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து நடத்த உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன்பு உயர் நீதிமன்ற மதுரைகிளையில் விசாரணைக்கு வரவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்