அதிமுக அவைத்தலைவர் அறிவிப்பு

x

பொதுக்குழு உறுப்பினர் அளிக்கும் கடிதத்தை இன்று காலை டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளதாக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து, இதுவரை 85 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது, இந்த கடிதங்களை கணக்கிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த பணி நிறைவு பெற்ற பிறகு, கடிதங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மகாராஷ்டிராவில் உள்ள அதிமுக மாநில செயலாளர் கணேசன், 11 பொது குழு உறுப்பினர்களின் கடிதத்துடன் சென்னை வந்து, தலைமை கழகத்தில் ஒப்படைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்