பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு "இது மட்டும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு" தேர்வுக்கு பின் சோகத்துடன் மாணவர்கள் பேட்டி

x
  • மதுரை மாவட்டத்தில் 37457 மாணவ மாணவியர் 116 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்
  • தமிழகத்தில் +2 பொதுத் தேர்வு இன்று தொடங்கி முதல் 03.04.2023 வரை நடைபெறுகிறது
  • +2 பொதுத் தேர்வில் 323 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் 18734 பேரும், மாணவியர்கள் 18723 பேரும் ஆக மொத்தம் 37457 பேரும் 116 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
  • வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து மேல்நிலை +1, +2 ஆண்டிற்கான வினாத்தாட்கள் 30 வழித்தடங்கள் வழியாக ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் கொண்டு செல்லப்பட உள்ளது.
  • இப்பொதுத் தேர்வில் முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் அறைக் கண்காணிப்பாளர்கள், நிலையான படை (Standing Squad) உறுப்பினர்கள் என 3400 தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் தேர்வுப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 8 ஆய்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இத்தேர்வினை கண்காணிக்க உள்ளனர்.
  • இவ்வாண்டு 352 மாற்றுத்திறனாளிகள் மாணவ/மாணவியர்களில், கண்பார்வை குறையுள்ள/மனவளர்ச்சி குன்றிய மற்றும் கை ஊனமுற்ற 80 மாணவ/மாணவியர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் (Scribe) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • இவ்வாண்டு 4 மையங்களில் மேல்நிலை +2, +1 தனித்தேர்வர்கள் 1231 பேர் தேர்வெழுதவுள்ளனர்.
  • இவ்வாண்டு மேல்நிலை பொதுத் தேர்விற்கு உறங்கான்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி புதிய தேர்வு மையமாக அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்