Actor Mohanlal | நடிகர் மோகன்லால் எடுத்த திடீர் முடிவு
Actor Mohanlal | நடிகர் மோகன்லால் எடுத்த திடீர் முடிவு
#ActorMohanlal #elephant #tusk #thanthitv
யானை தந்தங்களை ஒப்படைக்க நடிகர் மோகன்லால் விண்ணப்பம் மலையாள நடிகர் மோகன்லால் தன் வசமுள்ள யானைத் தந்தங்கள் மற்றும் அவற்றால் செய்யப்பட்ட கலைப் பொருட்களை வனத்துறையிடம் ஒப்படைக்க விண்ணப்பித்துள்ளார். கேரள வனத்துறையின் ஒருமுறை மன்னிப்புத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மாவட்ட வன அலுவலரிடம் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில், அவரிடமுள்ள இரண்டு ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் 13 கைவினைப் பொருட்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். 2011-ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனையில் இந்த யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக நீடித்து வந்த வழக்கின் பின்னணியில் தற்போது அவற்றை முறையாக ஒப்படைக்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
