``8-க்கு 8 அடிச்சிடலாமா?’’ - அருகே வைத்திலிங்கம்.. கேட்ட உதயநிதி.. கூட்டத்தில் இருந்து வந்த ரெஸ்பான்ஸ்
திமுக தஞ்சையில் 8க்கு 8 வெற்றி பெற வேண்டும் என உதயநிதி பேச்சு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அவர், “தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்று 8க்கு 8 அடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஒரத்தநாடு தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் 35 லட்சம் மாணவர்களுக்கு லாப்டாப் வழங்கப்படும் என்றும், மகளிர் நலத்திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். மேலும், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், தமிழக வளர்ச்சிக்காக இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தினார்.