பாஜக அரசை கண்டித்த தவெக சிறுபான்மையினர் நடத்தும் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை ஒடுக்கும் நோக்கில் கொண்டுவரப்படும் 'வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை' (FCRA) சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வலியுறுத்தியுள்ளார். போர்ச்சூழலால் விலைவாசி உயர்வு மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அவதியுறும் நிலையில், இச்சட்டத்தைக் கொண்டு வருவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். லட்சக்கணக்கானோர் பயன்பெறும் தொண்டு நிறுவனங்களை முடக்கும் இம்முயற்சியைக் கைவிடக் கழகத் தலைவர் விஜய் சார்பாக ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.