பூந்தமல்லி தவெக வேட்பாளருக்கு சிக்கல் பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசத்திற்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் அளித்துள்ள இந்த மனுவில், தனக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதால் தனது குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ள பிரகாசம் மீது ஏற்கனவே 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மனு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.