Election | EVM | தேர்தலுக்காக EVM அனுப்பி வைக்கும் பணி தீவிரம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன