சென்னையில் நாளை ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு இது தெரியுமா? அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்குள்ளேயே வாக்குச்சாவடி மையங்கள் சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்றத் தொகுதிகளில் முதன்முறையாக 5 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்குள்ளேயே வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பிரின்ஸ் வில்லேஜ் வளாகத்தில் 2 மையங்களும், விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமக் குடியிருப்பில் 2 மையங்களும், வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள சிடிஎஸ் ரீகல் பாம் கார்டன் குடியிருப்பில் 2 மையமும் என மொத்தம் 5 இடங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் நீண்ட தூரம் செல்வதைத் தவிர்த்து, அவர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், வாக்குப் பதிவு சதவீதம் 80 சதவீதத்திற்க்கும் மேல் உயரும் என குடியிருப்பு நலச் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.