DMK Campaign |"வீடு இல்லாதவர்களுக்கு.." - மக்களுக்கு உறுதி கொடுத்து வாக்கு திரட்டிய செந்தில் பாலாஜி
கோவை தெற்கு தொகுதியில் உலகத் தரம்வாய்ந்த மல்டி-லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்படும் என்று, அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்தார். உக்கடம் நரசிம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், உக்கடம் மேம்பாலம் கட்டும் பணியின் போது வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் வீடு ஒதுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றை விரைவில் நிறைவேற்றுவோம் என தெரிவித்த அவர், வீதியெங்கும் சென்று ஆதரவு கோரினார்.