தீவிரமாய் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா - மாலை போட்டு மலர் தூவி வரவேற்ற மக்கள்
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், உச்சிப்புளி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாகாச்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டுத் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய அவருக்கு, பெண்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். கல்கிணற்றுவலசை, ஆக்கிடாவலசை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்ற அவரிடம், திமுக நிர்வாகிகள் பிரம்மாண்ட மாலைகள் மற்றும் ‘வேல்’ வழங்கி ஆதரவு தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்பகுதியில் வாழ்வாதாரமாக விளங்கும் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் நலனே தனது முதல் இலக்கு என்றார்.