அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் வேட்புமனுத்தாக்கல் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ எஸ். பவுன்ராஜ், ஒரு நெகிழ்ச்சியான நிகழ்விற்குப் பிறகு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஒழுகைமங்கலம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருமணத்தில், மணமக்களுக்குத் தனது கையால் மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். அதன்பின்னர் அதே ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த அவர், கட்சி நிர்வாகிகளுடன் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் தனது வேட்புமனுவை முறையாக வழங்கினார்.