• விளைநிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில் உணவு தேடி விவசாய விளைநிலம் அருகே வந்த 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண் யானைகள் மற்றும் ஒரு ஆண் யானை, மின் ஒயரை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தன.
• நல்வாய்ப்பாக இரண்டு குட்டி யானைகள் உயிர்தப்பிய நிலையில், விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் சட்டவிரோதமாக மின் வேலி அமைத்ததாக, முருகேசன் என்ற விவசாயியை கைது செய்தனர்.
• இதனிடையே, தாய் இறந்ததை அறியாத குட்டி யானை, தும்பிக்கையால் எழுப்பி பாசப்போராட்டம் நடத்தியது காண்போரை கண்கலங்க செய்தது...