ஸ்பாட் லைட்

பள்ளிக்குள் முன்னாள் மாணவி துப்பாக்கிச் சூடு.. 3 குழந்தைகளுடன் 7 பேர் துடிதுடித்து பலி - அடுத்தடுத்து தாக்க திட்டம் - அமெரிக்காவில் பகீர் சம்பவம்

தந்தி டிவி
• அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து முன்னாள் மாணவி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். • டென்னீசி மாகானம் நாஷ்வில்லில் தேவாலயத்துடன் கூடிய கிறிஸ்தவ தொடக்கப் பள்ளிக்குள் புகுந்த பெண் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால், மாணவர்கள், ஆசிரியர்கள் தலைதெறிக்க ஓடினர். • இந்த தாக்குதலில், 3 குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். • தகவலறிந்து சென்ற காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணை சுட்டுக் கொன்றனர். • விசாரணையில், அந்த பெண், அந்த பள்ளியின் முன்னாள் மாணவியான 28 வயது எலிசபெத் ஹாலே என்பது தெரிய வந்த‌து. • அவர் மேலும் பல பள்ளிகளில் தாக்குதல் நடத்துவதற்காக, பள்ளிக் கூடங்களில் வரைப்படங்களை வரைந்து வைத்திருந்த‌தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். • அவர் ஒரு திருநங்கையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்