கேஸ் சிலிண்டரைத் தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புகின்றனர். ஆனால், வதந்திகளை நம்பி, மக்கள் பீதியடைய வேண்டாம் என பெட்ரோலிய நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.